இலங்கையில் பாகனை புரட்டி எடுத்த யானை: பெரஹராவில் சம்பவம்

பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொண்ட யானை ஒன்று திடீரென பாகனை மிதித்துத் தள்ளி அட்டகாசம் புரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் மாத்தறை தேவிநுவர பெலி பெரஹெராவில் நேற்று (04)மாலை இடம்பெற்றது.

தேவிநுவராவில் உள்ள உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு தேவாலாவின் மூன்றாவது ஊர்வலம் நேற்று (04) மாலை கோலாகலமாக இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்தில் “பானுகா” என்ற யானை திடீரென பாகனை மிதித்து தள்ளி சரிந்து விழுந்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யானை திடீரென பாகனை மிதித்து தள்ளியதுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களையும் தாக்க முயற்சித்துள்ளது.

இதனால் அங்கிருந்த சிறியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அலறி அடித்து அங்குமிங்குமாக ஓடிச் சென்றனர்.

குறிப்பிட்ட சில நிமிடங்களாக யானையைக் கட்டுப்படுத்த முடியாமல் யானைப் பாகன்கள் திணறினர். பின்னர் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் யானையைக் கட்டுப்படுத்தி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

குறித்த காட்டு யானை தாக்கியதில் யானைப் பாகன் ஒருவர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து யானைகளையும் அகற்றி ஊர்வலத்தை நடத்த ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதன்பின்னர் பெரஹரா ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!