குடும்பச் சொத்தாக மாறிய அரச காணிகள்? அம்பலமான முன்னாள் அமைச்சர்களின் இரகசியம்!

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அரசாங்க நிலங்களை தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளதாகப் பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், சில அமைச்சர்கள் தனிப்பட்ட இரத்தினக் கல் அகழ்வு (Gem Mining) நடவடிக்கைகளுக்காகக் காணிகளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் பகிரங்கமாகக் கூறினார்.

1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்தச் சட்டம் இலக்கம் 1 (Land Reforms Act No. 1 of 1972) இன் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகள் முறையாக அளவிடப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் வெளிப்படுத்தினார்.

“1972 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் எவ்வளவு ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!