கிளிநொச்சியில் மசாலாப் பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுடன் நால்வர் கைது.

கிளிநொச்சியில் கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 கிலோகிராம் ஏலக்காய், 260 கிலோகிராம் மஞ்சள் தூள், 273 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) வாடகை வண்டிக கடற்படையினரால் கைப்பற்றியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 49 வயதுக்குட்பட்ட எரக்கண்டி, கல்முனைகுடி, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு (04) சந்தேக நபர்கள், மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் மற்றும் இரண்டு (02) வாடகை வண்டிகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி