நண்பகலுக்குப் பின் மீண்டும் சரிந்தது தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (19) நண்பகல் அளவில் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி,

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 13,000 ரூபாவினால் குறைவடைந்த நிலையில் 362,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9,000 ரூபாவினால் குறைந்திருந்ததுடன், அந்த நிலை தொடர்ந்தமையால் நண்பகல் வேளையில் மேலும் 4,000 ரூபாவினால் தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று (18) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 374,400 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இன்று அது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று 407,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 394,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

lanka ioc
லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
kim jong un
மர்ம பொருளை ஏவி சோதனை நடத்திய வடகொரியா: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
fuel
இலங்கை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு
anura
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்!
indian cricket team
டிட்வா நிவாரண திட்டத்திற்காக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி
Suresh Saleh
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை!