🔴 VIDEO இனி மனைவி தொல்லை இல்லை! கணவன் செய்த செயல்! வைரலாகும் வீடியோ

அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபர் கிராமத்தை சேர்ந்த மாணிக் அலி என்ற நபர், தனது மனைவியிடம் இருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றதை ஒட்டி, 40 லிட்டர் பாலில் குளித்து, அதனை வாழ்க்கையின் புதிய அத்தியாயம் எனக் கொண்டாடியிருக்கிறார்.

மாணிக் அலியின் மனைவி, கடந்த சில மாதங்களாகவே ஒரு காதலனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. காதலனுடன் இருமுறை வீட்டைவிட்டு வெளியேறும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. மகளின் நலனுக்காக மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொண்டிருந்த மாணிக், பிறகு மீண்டும் மனைவி காதலனுடன் தொடர்பில் இருப்பதை கண்டதும், விவாகரத்து தான் ஒரே தீர்வாக கருதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

விவாகரத்தை பெற்றதும், “இது எனது வாழ்க்கையின் புதிய தொடக்கம். சுதந்திரம் கிடைத்த இந்நாளை கொண்டாடவே பாலில் குளித்தேன்,” என கூறியுள்ளார் மாணிக் அலி. தற்போதும் மகள் தனது மாமியாருடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரும் இது ஒரு தனித்துவமான சம்பவம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

former presidents
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்கள் : அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
gold price
வரலாற்றில் முதல் முறையாக அதி உச்சத்தை எட்டிய தங்க விலை!
court
பிரதம நீதியரசர் மீது பாதணியை வீசிய சட்டத்தரணி: பரபரப்பு சம்பவம்
NPP
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்!
crime
தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம்!
lady lawyer
பெண் சட்டத்தரணி செய்த முறையற்ற செயலால் அதிரடியாக கைது! யாழில் சம்பவம்