இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து வெளியான தகவல்!

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்துள்ளார்.

“தற்போது, அத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எமது பாதுகாப்புப் படைகள் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன

எனவே, தேசியப் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அமைச்சர் கூறினார்.

அத்துடன், திட்டமிட்ட குற்றக்கும்பல் தலைவர்கள் நாட்டிற்குத் திரும்பத் திட்டமிடுவதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்த அவர், தனது முந்தைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறினார்.

“சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அந்தக் கடத்தல் பாதையை விட்டுவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அந்தப் பாதையை விட்டு வெளியேற விரும்புவது ஒரு நேர்மறையான விடயம்,” என்று மட்டுமே தாம் தெரிவித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசேட குழு
gotabaya rajapaksa
கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை
arrest
சென்னையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!
negombo prison issue
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த 4 அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
negombo prison
மோதல்களினால் இரத்தக் களரியான நீர்கொழும்பு சிறைச்சாலை: கட்டுக்கடங்காத வன்முறையின் பின்னணி
negombo prison
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!