இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் முக்கிய இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) விடுத்துள்ள அறிவிப்பின்படி, டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம், ஹைஃபாவில் உள்ள இராணுவ மையங்கள் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய விமானப்படைத் தலைமையகம் ஆகியவற்றை இலக்கு வைத்து கைபர் (Kheibar) ரக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்துள்ள இந்தப் போர், தற்போது துபாய், பஹ்ரைன், குவைத் மற்றும் ஈராக் எனப் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கரும்புகை எழுந்ததுடன் சவூதியின் அராம்கோ (Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த மோதல்களால் இதுவரை ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளதுடன் வளைகுடா நாடுகளில் ஈரானின் பதிலடித் தாக்குதல்களால் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஈரானின் இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இது பெரும் அச்சுறுத்தல் எனவும் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகள் இந்தப் போரைத் தணிக்க உடனடியாக முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி