அண்டை நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் பிராந்திய நாடுகளிடம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரான் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் தனது நாட்டுக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட பிராந்திய ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் அண்டை நாடுகளிலிருந்து முன்னெடுக்கப்படாவிட்டால், தனது நாடும் பிராந்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“இனிமேல், அண்டை நாடுகள் முதலில் தாக்காத வரை அவை மீது தாக்குதல் நடத்த வேண்டாம்” என ஈரானின் இடைக்காலத் தலைமை தீர்மானித்துள்ளதாகவும் பெசெஷ்கியான் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை