அண்டை நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் பிராந்திய நாடுகளிடம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரான் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் தனது நாட்டுக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட பிராந்திய ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் அண்டை நாடுகளிலிருந்து முன்னெடுக்கப்படாவிட்டால், தனது நாடும் பிராந்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“இனிமேல், அண்டை நாடுகள் முதலில் தாக்காத வரை அவை மீது தாக்குதல் நடத்த வேண்டாம்” என ஈரானின் இடைக்காலத் தலைமை தீர்மானித்துள்ளதாகவும் பெசெஷ்கியான் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்