அண்டை நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் பிராந்திய நாடுகளிடம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரான் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் தனது நாட்டுக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட பிராந்திய ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் அண்டை நாடுகளிலிருந்து முன்னெடுக்கப்படாவிட்டால், தனது நாடும் பிராந்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“இனிமேல், அண்டை நாடுகள் முதலில் தாக்காத வரை அவை மீது தாக்குதல் நடத்த வேண்டாம்” என ஈரானின் இடைக்காலத் தலைமை தீர்மானித்துள்ளதாகவும் பெசெஷ்கியான் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!