“வாகன விலைகள் உயருமா?” வெளியான தகவல்

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுங்க வரி திருத்தங்கள் குறித்து, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முக்கிய விளக்கமளித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் நிதி கொள்கை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வரி அமைப்பில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுங்க இறக்குமதி வரி (Customs Import Duty – CID) – தற்போதுள்ள 20 வீத வரி விகிதம் 30 வீதமாக ஆக உயர்த்தப்பட உள்ளது.

சுங்க வரி கூடுதல் கட்டணம் (Surcharge) – தற்போது நடைமுறையில் உள்ள 50 வீத கூடுதல் கட்டணம், மற்றொரு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.

இருப்பினும், ஏப்ரல் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, தற்போதுள்ள வரிகளுடன் கூடுதலாக 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மட்டும் சேர்க்கப்படும்.

இதுவே வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் ஒரே கூடுதல் செலவாகும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை