ஹிக்கடுவ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் பாகங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

காலி கடற்கரையில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரானிய கப்பலின் பல துண்டுகள் இன்று (07) ஹிக்கடுவ முதல் சீனிகம வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற போர் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) கப்பல் மீது கடந்த 4ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 87 படையினர் உயிரிழந்ததுடன், 32 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

இந்த வெடிப்பு காரமாக கடற்கரை முழுவதும் டீசல் கறைகள் காணப்படுவதாகவும், மீன்களும் இறந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இந்த கடற்கரைக்கு வருவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..

எனவே அதிகாரிகள் இந்த விடயத்தை விரைவில் ஆராய்ந்து ஒரு தீர்வை வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரி்கை விடுத்துளள்னர்.

மேலும், பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இலங்கை கடற்பரப்பில் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!