தென்னிலங்கையில் ரூ.10 இலட்சம் லொத்தர் பரிசைப் பெற்றுத் வீடு திரும்பியவர் விபத்தில் மரணம்!

தென்னிலங்கையில் லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன், குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஹொரண – பொக்குணுவிட்ட, வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த இருவரும் கொழும்பில் இருந்து ஹொரண நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்தின் மதிலுடன் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 24 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!