உயிரிழந்தவரின் இதயத்தைக் காணவில்லை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

இந்தோனேசிய பாலி தீவில் உயிரிழந்த அவுஸ்திரேலிய பிரஜையின் இதயம் காணாமல் போன விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் அண்மையில் பாலியில் உள்ள ஒரு தனியார் விடுதியின் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் ஹாடோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அவர் நீரில் மூழ்கியதால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சுமார் 4 வாரங்களுக்குப் பின் அவரது உடல் அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் இறுதிச் சடங்கிற்கு 2 நாட்களுக்கு முன்னதாக, அவுஸ்திரேலியாவில் இரண்டாவது முறையாக அவருக்குப் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் இதயம் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அவுஸ்திரேலிய காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!