இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகளவான அரச அதிகாரிகள்!

2025 இல் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 76 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள் என்று அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, மொத்தம் 24 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட 119 சோதனை நடவடிக்கைகளின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2025 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஊழல் மற்றும் மோசடிக்காக 7 அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு இந்த 11 மாதங்களில் மொத்தம் 7,811 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!