தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த முறையை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானாலும் 2 மணிநேரத்தில் தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதில் 17.69 சதவீதம் பேர் அதாவது 1 கோடி 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
