தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல் 2 மணி நேரத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்குப்பதிவு!

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த முறையை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானாலும் 2 மணிநேரத்தில் தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதில் 17.69 சதவீதம் பேர் அதாவது 1 கோடி 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!