தலாவ பேருந்து விபத்தில் ஒருவர் பலி – 39 பேர் காயம்!

தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து விபத்திற்குள்ளானபோது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பல மாணவர்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டோர் அதில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட முயன்றபோதே பேருந்து விபத்திற்குள்ளானதாக தலாவ பேருந்து விபத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து மிகக் குறுகிய சாலையில் பயணித்ததாகவும், இதன்போதே மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்று விபத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு