நடுவானில் விமானம் தீப்பிடித்ததால் மூச்சுத்திணறலுக்கு உள்ளான பயணிகள்

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற விமானத்தில், திடீரென வெளியான புகை காரணமாக 4 பேருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் 142 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதுடன் குறித்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகனை அந்த நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!