நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் காவல்துறை அதிரடி நடவடிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, பீப்பாய்கள், அதிக கொள்ளளவான போத்தல்கள் ஆகியவற்றில் எரிபொருளை நிரப்பக்கூடாது என, நிரப்பு நிலையங்களுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எரிபொருளைப் பதுக்குவோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் புலனாய்வுத் துறையினர் சோதனைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!