நாட்டு மக்களுக்கு பொலிசாரின் அவசர எச்சரிக்கை!

இணையம் ஊடாக நடக்கும் நிதி மோசடி தொடர்பாக காவல்துறையினர் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக இடம்பெறும் நிதி மோசடி காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வட்ஸ் அப் (whatsapp), டெலிகிராம் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைய வழி நிதி மோசடிகள் நடைபெறுவதாகவும் இது தொடர்பில் தினமும் முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி அறிமுகமற்ற நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி தூண்டுதல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் வங்கி கணக்கு இலக்கங்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்டவற்றை வெளியாட்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!