🔴 VIDEO நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து ஆலய தரப்பினர் ஏன் மௌனம் காக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பக்தர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதனால் குறித்த பகுதிக்குள் கலணியுடன் உள்நுழைவதற்கு அனுமதி கிடையாது. மேலும் வெளிநாட்டு தூதுவர்களோ, அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ வந்தால் கூட உரிய முறைப்படி காலணிகளை அதற்குரிய இடங்களில் கழற்றிவிட்டு தான் ஆலய வளாகத்தினுள் உள் நுழைவது வழமை.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி காலணியுடன் உள்ளே நுழைந்தமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழா ஆரம்பமான அன்றையதினம் இராணுவ வாகனம் ஒன்றும் அத்துமீறி ஆலய வளாகத்தினுள் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mannar news
மன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!
ஆறுமுகம் சபேஸ்வரன்
கனடாவில் காலமான ஊடகவியலாளர் அ.சபேஸ்வரனின் பூதவுடல் புதன்கிழமை தாயகம் வருகை: வியாழனன்று கோம்பயன் மணலில் தகனம்!
jaffna university
யாழ். பல்கலைக்கழக மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
namal rajapaksa
லண்டனில் வீட்டின் மீது தாக்குதல்: கல்வி கற்ற காலத்தில் சந்தித்த அச்சுறுத்தல்களை விவரித்த நாமல்!
sri lankan passport
இலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!
Borella Magazine Prison
மெகசின் சிறைச்சாலை மோதல்: கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் முக்கிய சந்தேகநபர் பலி!