துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார், மிதெனியா – உலஹிதியாவ பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு கொலைக்குப் பின்னர் பெக்கோ சமனின் தாயார் தங்குமிடம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு யாழ்ப்பாணத்திற்குப் பயண வசதிகளைச் செய்து கொடுத்தவரும் பெக்கோ சமனே என குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், கணேமுல்ல சஞ்சீவவுக்கு விசுவாசமான கரந்தெனிய சுத்தா கும்பலால் அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர், இஷாரா செவ்வந்தி மாத்தறை மற்றும் வவுனியாவில் தங்கியிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
