பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கான வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனை சந்தித்துள்ளார்.

தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிகழ்வின் போது இந்த சந்திப்பு இடம்பெற்று்ளளது.

சபையின் பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வொன்றினை பிரான்ஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.

இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!