கொழும்பு மாநகர சபை ஊழல் விசாரணை: ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரோசி சேனநாயக்க!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இன்று(17.07.2026) முன்னிலையாகியுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​அவர் மேயராக இருந்த காலத்தில், சதொச எனும் அரசாங்க நிறுவனம் மூலம் குறைந்த வருமானம் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கிய திட்டம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​நாங்கள் சதொச மூலம் ஏழைகளுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம். அந்தத் திட்டம் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே நான் அழைக்கப்பட்டேன் என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!