லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த சோகம்! ரஷ்யாவில் கதறும் இலங்கை இளைஞர்கள்!

ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி, வத்தேகம, தம்புள்ளை, மாவனல்லை, கெக்கிராவ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ரஷ்யாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 1.8 மில்லியன் முதல் 2.1 மில்லியன் ரூபா வரை பணம் பெறப்பட்டு அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், அங்கு சென்றடைந்த பின்னர் உரிய வேலைகள் வழங்கப்படாமல், பணம் எதுவுமின்றி பண்ணை ஒன்றில் மிகவும் துயரமான சூழ்நிலையில் அவர்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

தங்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருமாறு அல்லது முறையான விசா மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!