🔴 PHOTO கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!

கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பீல் (Peel) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொரன்ரோவை சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என்பவரே தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது , இரண்டு கொலை முயற்சி, துப்பாக்கி சூடு மேற்கொண்டமை மற்றும் அங்கீகரிக்கப்படாத துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பிரதீபன் நாகராஜாவுடன் தொடர்பு கொண்டிருந்த எவரும் அல்லது அவர் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவரைக் கண்டுபிடிப்பவர்கள் அவரை அணுகாமல், உடனடியாக 911 என்ற எண் அல்லது 905-453-2121 அல்லது 4990 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!