வெளிநாடொன்றில் இரவு நேரம் நகரமே பகலான அதிசய தருணம்!

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள சகுராஜிமா எரிமலை மீது ஒரு விண்கல் ஒன்று விழுந்துள்ளது.

இந்த அரிய நிகழ்வு, ககோஷிமா நகரவாசிகளையும், உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

விண்கல் விழுந்த சில நொடிகள், நகரத்தின் வானம் பிரகாசமான ஒளியில் மின்னி, இரவு பகலாக மாறியதை காட்சி காணொளிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

சகுராஜிமா, ஜப்பானின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும்.

ககோஷிமா வளைகுடாவில், நகரத்துக்கு வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த எரிமலை, கிட்டத்தட்ட தினமும் சிறு சிறு வெடிப்புகளை உருவாக்கி, புகை, சாம்பல் எல்லாம் வானத்தில் பரவ விடுகிறது.

இந்த எரிமலை மீது நேற்று இரவு 9:30 மணி அளவில் (ஜப்பான் நேரப்படி) ஒரு விண்கல் வந்து விழுந்துள்ளது.

வானத்தை ஒளிர வைக்கும் இந்த காட்சி, நகரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!