வீட்டின் முன் குப்பை கொட்டியதில் தகராறு: தட்டிக்கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதி!

உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் வசித்து வந்தவர் வீரேந்திரா (வயது 40). இவருடைய இளைய சகோதரர் சுனில்.

இந்நிலையில், சுனிலின் மகள், வீரேந்திரா வீட்டின் முன்பு குப்பையை வீசி சென்றுள்ளார். இதனைக் கவனித்த வீரேந்திரா அவரை கண்டித்துள்ளார்.

இதுபற்றித் தெரிய வந்ததும், சுனில் அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சுனில், வீட்டில் இருந்து கோடரியை எடுத்து வந்து வீரேந்திராவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அப்போது சுனிலின் மனைவி குட்டோவும் கம்புகளால் வீரேந்திராவைத் தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த வீரேந்திரா, உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள சிகிச்சை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், மீரட் நகருக்கு உயர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

இதுபற்றி வீரேந்திரா மனைவி சஞ்சல், தாக்குதல் நடத்திய சுனில், அவருடைய மனைவி குட்டோ ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்குப் பின்பு அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!