வீட்டின் முன் குப்பை கொட்டியதில் தகராறு: தட்டிக்கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதி!

உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் வசித்து வந்தவர் வீரேந்திரா (வயது 40). இவருடைய இளைய சகோதரர் சுனில்.

இந்நிலையில், சுனிலின் மகள், வீரேந்திரா வீட்டின் முன்பு குப்பையை வீசி சென்றுள்ளார். இதனைக் கவனித்த வீரேந்திரா அவரை கண்டித்துள்ளார்.

இதுபற்றித் தெரிய வந்ததும், சுனில் அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சுனில், வீட்டில் இருந்து கோடரியை எடுத்து வந்து வீரேந்திராவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அப்போது சுனிலின் மனைவி குட்டோவும் கம்புகளால் வீரேந்திராவைத் தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த வீரேந்திரா, உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள சிகிச்சை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், மீரட் நகருக்கு உயர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

இதுபற்றி வீரேந்திரா மனைவி சஞ்சல், தாக்குதல் நடத்திய சுனில், அவருடைய மனைவி குட்டோ ஆகியோருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்குப் பின்பு அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி