கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஜனாதிபதி? வெளியான அறிக்கை

ஜனாதிபதி அநுர திசாநாயக்க தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ள 22 முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் (VERITE Research) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதி தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு நிகழ்நிலை கருவியான ‘அநுர மீட்டர்’ அடைப்படையில் இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதன்போது, சம்பாதிக்கும்போது செலுத்தும் (PAYE) வரி முறையை திருத்தியமைத்தது மட்டுமே நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு வாக்குறுதியாக தெரிவிக்கப்படுகிறது.

வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் manthri.lk வலைத்தளத்தால் இயக்கப்படும் அநுர மீட்டர், பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட உயர் பொது நலன் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் 22 வாக்குறுதிகளை ஆராய்கிறது.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் வகை தேர்ந்தெடுக்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் 5% ஐக் குறிக்கிறது, இந்த 22 வாக்குறுதிகளில் 35% ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் மேலும் 14% தொடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த 22 வாக்குறுதிகளில் 10 ஆதாவது, 45% பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்று அநுர மீட்டர் தெரிவிக்கிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!