விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது கடுமையான பயணிகள் நெரிசலை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் குளிர்காலத்தில் வாராந்தம் மேலதிகமாக 40 விமான சேவைகளை முன்னெடுக்க நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும் குறைந்த இடவசதி காரணமாக அவற்றில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சில விமான நிறுவனங்கள் மட்டுமே மத்தள விமான நிலையத்தை மாற்று விமான நிலையமாக தேர்ந்தெடுத்துள்ளன.

ஆனால் பல விமான நிறுவனங்கள் வாய்ப்புகள் இல்லாததால் இந்த யோசனையை கைவிட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கிறது என பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக தாமதமாகி வரும் விமான நிலைய விரிவாக்கம் ஒரு அவசரத் தேவையாகும். சுமார் ஆறு தசாப்தங்களாக விமான நடவடிக்கைகளை எளிதாக்கி வரும் கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது இரண்டு ஓடுபாதைகளை கொண்டிருக்க வேண்டும்.

இந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் சவால்களை நிவர்த்தி செய்வது முன்னுரிமை என்று பேராசிரியர் ரணசிங்க வலியுறுத்தினார்.

மேலும் விமான நிலைய செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைவதில் சுற்றுலாத் துறை நேரடி சவால்களை எதிர்கொள்ளும் என கூறினார்.

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏற்கனவே 1.7 மில்லியனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!