விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது கடுமையான பயணிகள் நெரிசலை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் குளிர்காலத்தில் வாராந்தம் மேலதிகமாக 40 விமான சேவைகளை முன்னெடுக்க நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும் குறைந்த இடவசதி காரணமாக அவற்றில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சில விமான நிறுவனங்கள் மட்டுமே மத்தள விமான நிலையத்தை மாற்று விமான நிலையமாக தேர்ந்தெடுத்துள்ளன.

ஆனால் பல விமான நிறுவனங்கள் வாய்ப்புகள் இல்லாததால் இந்த யோசனையை கைவிட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்கிறது என பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக தாமதமாகி வரும் விமான நிலைய விரிவாக்கம் ஒரு அவசரத் தேவையாகும். சுமார் ஆறு தசாப்தங்களாக விமான நடவடிக்கைகளை எளிதாக்கி வரும் கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது இரண்டு ஓடுபாதைகளை கொண்டிருக்க வேண்டும்.

இந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் சவால்களை நிவர்த்தி செய்வது முன்னுரிமை என்று பேராசிரியர் ரணசிங்க வலியுறுத்தினார்.

மேலும் விமான நிலைய செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைவதில் சுற்றுலாத் துறை நேரடி சவால்களை எதிர்கொள்ளும் என கூறினார்.

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏற்கனவே 1.7 மில்லியனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்