யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாஸ்போட் வழங்கும் பணி எதிர்வரும் 01-09-2025 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது.
அதற்காகத் தயார்படுத்தப்படும் கட்டிடத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள்.

யாழ்ப்பாணக் கச்சேரியில் கச்சேரி நல்லூர் வீதியின் பக்கமாகப் பிரத்தியேகமாக இக் கட்டிடப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பாஸ்போட் நெருக்கடி நிலவிய போது 17-04-2025 ஆம் திகதியன்று உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைக்கு வந்த போது ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட வாக்குறதி பாஸ்போட் நெருக்கடி இல்லாத தற்போது நிறைவேறுகின்றது.

வவுனியாவில் காலை 07 மணிக்கு முதல் வரிசைக்குப் போகும் அனைவருக்கும் பாஸ்போட் கிடைக்கின்றது.
கொழும்பு,பத்திரமுல்லவில் காலை 06 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை செல்பவர்களுக்குப் பாஸ்போட் கிடைக்கின்றது.

அது போல மாத்தறை, குருநாகல், கண்டி பிராந்திய அலுவலகங்களிலும் பாஸ்போட் வழங்குவது இயல்பு நிலைக்கு வந்து விட்டது.

தற்போது பாஸ்போட் வழங்குவதில் 06 அலுவலகங்கள் வந்து விட்டது.

கிழக்கு மாகாணத்திலும் பாஸ்போட் வழங்கும் பிராந்திய அலுவலகத்தைத் திறக்க வேண்டும். அது போல ஊவா , வட மத்திய மாகாணங்களலும் ஒரு பிராந்திய அலுவலகத்தைத் திறக்க வேண்டும்.

அடுத்த வருடம் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் பாஸ்போட், தேசிய அடையாள அட்டை வழங்கும் அலுவலகங்களைத் திறந்து அதிகாரத்தை மக்களது காலடிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி