யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் கைது!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலக்கத் தகடு இன்றி பயணித்த சிற்றூந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவர் காவல்துறையினருக்கு கையூட்டல் வழங்க முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?