🔴 VIDEO காருக்குள் சிக்கிய சிறுமியை புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளியில் நடந்த சம்பவம் உள்ளூரில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் தவறுதலாக சிக்கிய சிறுமி, ஒரு இளைஞரின் புத்திசாலித்தனமான முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் குடும்பத்தினர் தங்கள் காரை பேக்கரிக்குப் புறம்பாக நிறுத்தியபோது, தவறுதலாக சாவி உள்ளே இருந்த நிலையிலேயே கதவுகள் பூட்டப்பட்டன. அதில் சிறிய சிறுமி சிக்கிக்கொண்டதால் பெற்றோரும் பொதுமக்களும் பதற்றமடைந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு இளைஞர், தனது மொபைல் மூலம் காருக்குள் இருந்து கதவைத் திறக்கும் முறையை விளக்கும் வீடியோவை தேடினார். அதைச் சிறுமிக்குக் காட்டிய அவர், அவளையும் அந்த படிகளை பின்பற்றச் செய்தார். சிறுமியும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்ததில், கதவு திறக்கப்பட்டு அவள் பாதுகாப்பாக வெளியே வந்தார்.

சிறுமி பாதுகாப்பாக வெளியே வந்ததும், அங்கு இருந்தவர்கள் பெருமூச்சுவிட்டனர். தன்னுடைய சாமர்த்தியமும் விரைவான முடிவும் பெரிய விபத்தைத் தவிர்த்ததாகக் கூறி உள்ளூர்வாசிகள் அந்த இளைஞருக்கு பாராட்டு தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுமி எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளதால், அந்த இளைஞரின் நிதானமான செயல் சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!