யாழில் வீடு புகுந்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று காலை வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொழுப்பு சென்றவர்கள் நேற்றுமாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டு இருந்ததை அவதானித்தனர்.

இந்நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!