சிறுநீரை அடக்கி வைப்பவரா நீங்கள்? பாதிப்பு நிச்சயம்! என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு பாருங்க!

பல்வேறு காரணங்களால், குறிப்பாக பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாதபோது, பலரும் சிறுநீரை அடக்கும் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். இந்த ஒரு வழக்கம் தான், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்துடன் இருக்கிறது.

மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது, சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் சிறுநீர்ப்பையின் தசைகள் பாதிக்கப்படுவதோடு, பாக்டீரியாக்கள் வளர்வதற்கும் வழிவகுக்கும். இது தொடர்ந்து யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் நேரிடும் என்றும், இடுப்பு வலி, தசை வலி, தலைவலி உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு காரணமாகிறது. சிறுநீரக பாதை தொற்று மட்டுமல்ல, சிறுநீரக தொற்றுகளுக்கும் இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிறுநீரை அடக்கம்

இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் பாரம்பரிய கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்த சுத்தம் குறித்த பயத்தை தவிர்த்து, உடலை பாதுகாக்க சிறுநீரை அடக்காத பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ravi Mohan with new projects in Sri Lanka
இலங்கையில் புதிய திட்டங்களுடன் ரவி மோகன்
Marriage registration for Sri Lankan Tamils
இலங்கைத் தமிழர்களுக்கு திருமணப் பதிவு: 2 நாள் விசேட முகாம்.
fc
அசைவம் விற்கக்கூடாது.. KFCக்குள் புகுந்த கும்பல் அட்டூழியம் - உணவகம் மூடல்
New Project t (5)
காசாவில் இருந்த ஒரே ஒரு தேவாலத்தை குண்டுவீசி தகர்த்த இஸ்ரேல்! கொந்தளித்த ட்ரம்ப்..!
karnadaga
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைப்பு? நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்கள்
New Project t (4)
ஈழத்தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள்: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பா ?