மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் தவறான முடிவெடுத்த யுவதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்திலிருந்து, நேற்றிரவு சுமார் 7 மணியளவில் யுவதி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிஸார், அந்த யுவதியை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் தாழங்குடா – சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கடந்த ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ranil
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
accident
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து
anura-julie chung
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
jaffna death
யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
arrest
பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது
kilinochchi
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து 04 பேர் பலி!