வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் சந்தேகநபராக 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kanavan manavi
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
15 people died in Sri Lanka in 24 hours
இலங்கையில் 24 மணி நேரத்தில் 15 பேர் பலி.
skynews-hospital-beer-sheva_6945606
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!
baba
காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு
nari
நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்!
tna
தமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..