🔴 VIDEO ஜெர்மனியில் 100 பயணம் செய்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது!

பெர்லின் – ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்தனர். இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) மாலை ஜேர்மனி நேரப்படி 6.10 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Train crash in Germany costs many lives.

குறித்த சம்பவத்தின்போது ரயிலில் சுமார் 100 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை மற்றும் அவர்களது நிலைமை குறித்து கூடுதல் தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதுடன், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்ச்சியாக ஜேர்மனியின் ரயில் உள்கட்டமைப்பு மீதான விமர்சனங்களை தூண்டியுள்ளது. ரயில் சேவைகள் அடிக்கடி தடைபடுவது, தொழில்நுட்பக் கோளாறுகள் ஆகியவை பயணிகளுக்கு பெரும் சிக்கல்களைக் ஏற்படுத்தி வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

ஜேர்மனியின் பழைய உள்கட்டமைப்பை புதுப்பிக்க பல பில்லியன் யூரோ செலவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜேர்மனியப் பிரதமர் ஃபிரேட்ரிக் மெர்ஸ் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!