கணவனின் தாக்குதலில் 29 வயது மனைவி உயிரிழப்பு!

குடும்பத் தகராறு முற்றியதில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த 29 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பலத்த காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் அரலகங்வில, பிம்பொகுண பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவனைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!