கனடா செல்ல முயன்றபோது கடத்தல்: எத்தியோப்பியாவில் சிக்கிய 3 இலங்கையர்கள் பத்திரமாக மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணிக்கும் நோக்குடன் வந்திருந்த அந்த மூன்று இலங்கையர்களும் அங்கே கடத்தப்பட்டிருந்தனர்.

அவர்களை விடுவிப்பதற்காக, ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 30,000 லர் வீதம், மொத்தம் 90,000 டொலர்களை கப்பமாக வழங்குமாறு கடத்தல்காரர்கள் கோரியிருந்தனர்.

இந்தக் கடத்தல் குறித்து எதியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், அந்நாட்டின் போலே புறநகர் பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொண்டதையடுத்து, கடந்த மே 26 அன்று விசாரணைகள் தொடங்கியிருந்தன.

காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்த மூன்று இலங்கையர்களும் எத்தியோப்பியாவுக்கு வந்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

விரிவான கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் விளைவாக, விமான நிலையத்திலிருந்து இலங்கையர்கள் அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் குறித்த தகவல்களை பொலிசார் கண்டறிந்திருந்தனர்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள ஷஷெமனே என்ற நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன்படி, நாட்டின் பாதுகாப்புப் படைகள் நடத்திய திடீர் சோதனையின்போது அந்த மூன்று இலங்கையர்களையும் வெற்றிகரமாக மீட்டதோடு, இரண்டு எத்தியோப்பியர்கள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

எத்தியோப்பிய தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை, கூட்டாட்சி (பெடரல்) பொலிஸ், தகவல் வலையமைப்பு பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் ஓரோமியா பிராந்திய பொலிஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சி காரணமாகவே மூன்று இலங்கையர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை