🔴 VIDEO விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை பார்வையிட்ட மோடி!

இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் 242 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஹமதாபாத் விமான நிலையத்துக்கு இன்று (13.06.2025) காலை சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்..

பல உயிர்களை இழந்தது “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்று தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாங்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வளவு திடீர் மற்றும் இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் அவர்களின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும் இந்த வெற்றிடம் பல ஆண்டுகளுக்கும் உணரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!