அகமதாபாத் விமான விபத்தை முன்கூட்டியே கணித்த பெண் பயணி!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

242 பேருடன் புறப்பட்ட விமானத்தில், 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரே காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விமானத்தில் பரோடாவைச் சேர்ந்த 51 வயதான யாஸ்மின் வோரா, அவரது மருமகன் பர்வேஸ் வோரா மற்றும் அவரின் 4 வயது மகள் ஜுவேரியா ஆகியோர் பயணித்துள்ளனர்.

புறப்படும் நேரத்தில், யாஸ்மின் விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், “ஏதோ சரியில்லையென உணர்கிறேன்” என தனது கணவருக்கு தொலைபேசியில் கூறியிருந்தார். இது சம்பவத்திற்கு சில நிமிடங்கள் முன்பாகவே நடந்ததுள்ளது.

லண்டனில் உள்ள தனது இரண்டு கர்ப்பிணி மருமகள்களை பார்ப்பதற்காக ஜூன் 9ம் திகதி செல்ல திட்டமிட்டிருந்த யாஸ்மின், பின்னர் ஜூன் 12ம் திகதிக்கு பயணத்தை மாற்றியிருந்தார். அதே 9ம் திகதியே சென்றிருந்தால், யாஸ்மின் இந்த உயிரிழப்பு பட்டியலில் இல்லாதிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!