பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!

பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெறவிருந்த விரிவுரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத இறுதியில் நாமல் ராஜபக்சவின் பிரித்தானிய விஜயத்தின் போது, ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், பிரித்தானியா முழுவதும் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்கள் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்பதற்கு கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.

அதன்போாது, ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் மாணவர் சங்கங்களும் பிரிட்டனின் தமிழ் இளைஞர் அமைப்பும் (TYO UK) நாமலுக்கு வழங்கப்பட்ட பேச்சு வாய்ப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு அழைப்பு விடுத்தன.

இந்த நிலையில், எதிர்ப்புகள் மற்றும் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஏற்பாட்டாளர்கள் கேம்பிரிட்ஜ் யூனியன் விரிவுரையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்சவிடமிருந்து எவ்வித பதில்களும் இதுவரை வெளியாகவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்