பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!

பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெறவிருந்த விரிவுரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத இறுதியில் நாமல் ராஜபக்சவின் பிரித்தானிய விஜயத்தின் போது, ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், பிரித்தானியா முழுவதும் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்கள் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்பதற்கு கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.

அதன்போாது, ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் மாணவர் சங்கங்களும் பிரிட்டனின் தமிழ் இளைஞர் அமைப்பும் (TYO UK) நாமலுக்கு வழங்கப்பட்ட பேச்சு வாய்ப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு அழைப்பு விடுத்தன.

இந்த நிலையில், எதிர்ப்புகள் மற்றும் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஏற்பாட்டாளர்கள் கேம்பிரிட்ஜ் யூனியன் விரிவுரையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்சவிடமிருந்து எவ்வித பதில்களும் இதுவரை வெளியாகவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசேட குழு
gotabaya rajapaksa
கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை
arrest
சென்னையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!
negombo prison issue
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த 4 அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
negombo prison
மோதல்களினால் இரத்தக் களரியான நீர்கொழும்பு சிறைச்சாலை: கட்டுக்கடங்காத வன்முறையின் பின்னணி
negombo prison
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!