அக்குரேகொடை இரட்டை கொலை – அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை இன்று (20) இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குற்றத்திற்காக துப்பாக்கிகளை வழங்க வந்த வாகனம் கொட்டாவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குற்றத்தைச் செய்வதற்கு முன்னர் தங்கியிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்ற வாகனத்தைக் கைப்பற்றுவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அதன் உரிமையாளர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேபோல், இந்த குற்றத்தைச் புரிவதற்காக கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேக நபர், இலக்கம் 102/9, விகாரை வீதி, மீவல, ருக்கஹவெல பகுதியைச் சேர்ந்த ரூபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்ற வாகனத்தின் உரிமையாளர், காலி பகுதியைச் சேர்ந்த வன்னி ஆரச்சிகே சிஹின தில்சர எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அந்த சந்தேக நபரையும் குறித்த வாகனத்தையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!