சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்

நுவரெலியா பிரதான நகரில் லாப் எரிவாயு மற்றும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுச் செல்கின்றனர். இருப்பினும், பலர் நீண்ட நேரம் காத்திருந்தும் சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் காணப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இன்று வியாழக்கிழமை (19) பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

விநியோகம் குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருப்பதால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது அவர்களின் அத்தியாவசிய சமையல் தேவைகளை பூர்த்தி செய்வதில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியாவின் பிரதான விநியோக நிலையங்களில் வழக்கத்தைவிடக் குறைந்த அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகளில் விநியோகம் தாமதமாகியுள்ளதாகவும், மேலும் சில இடங்களில் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு வகை சமையல் எரிவாயுகளிலும் ஒன்றையாவது கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவுவதால், நுகர்வோர் கடும் சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!