மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார்.
‘பேட்ரியட்’ (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இன்று (19) இலங்கை நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

சமீப காலமாக பல்வேறு தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்தனர்.

இந்நிலையில், மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி அவரை வரவேற்றதுடன் நடிகர் மோகன்லால் பார்வையார் கலரியிலிருந்து நாடாளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.