நாட்டில் தற்போதைய மற்றும் முன்னாள் உயர் அரசியல்வாதிகள் உட்பட 28 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளை காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது. இவர்களில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முந்தைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை பட்டியலில் இருவர் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத வருமானம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளன என்ற முறைப்பாடுகள் அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பாதுகாப்புத் துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பான சொத்து விபரங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.