மூன்றாவது நபரையும் பலியெடுத்த ஓமந்தை விபத்து! பெண் தொடர்ந்து சிகிச்சையில்!

கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் நேற்று (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு விட்டு யாழ்ப்பாண நோக்கி கார் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் அவரது மகனான பிரபாகரன் சர்மா அக்க்ஷய் (வயது 27) உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 15 ஐ சேர்ந்த துரைச்சாமிக்குருக்கள் சுவாமிநாதஐயர் (வயது 69) என்பவர் நேற்று (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும் பிரபாகரன் சர்மாவின் மனைவி சீதாலக்‌ஷ்மி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்