மகனின் திருமணம் ஒத்திவைப்பு, நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு.

”தனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டமை, இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே இடம்பெற்றுவரும் போருக்கு தான் கொடுத்த விலை” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 16ஆம் திகதி நடைபெற இருந்த பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக காசாவில் இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக உள்ள நிலையில், நாட்டின் பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக நெதன்யாகு மகனின் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ” பலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடுகின்றனர் எனவும், தனது குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல எனவும், தனது மகனின் திருமணமும் ஒத்திவைக்கப்பட்டது எனவும் அது போருக்காக நாங்கள் கொடுத்த விலையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதால் தனது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஒரு வீராங்கனையை போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார்” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போரின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நெதன்யாகு தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!