ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டுமாடிக்கட்டிடங்கள் பலத்தசேதமடைந்துள்ளன ,சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.
தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.
அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது.
வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டுஅகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது – அரசு ஊடகங்கள்
பென் குரியன் விமான நிலையம் உட்பட இஸ்ரேலில் உள்ள பல இடங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆதரவு தளங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை பிற இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.