🔴 PHOTO சாமர்த்தியமாக விபத்தை தடுத்த புகையிரத ஓட்டுனர்!

கலபட மற்றும் வட்டவளை இடையே புகையிரத பாதையில், மரம் ஒன்று புகையிரத பாதையில் முறிந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் புகையிரத ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக புகையிரத சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

நேற்று இரவு சுமார் 7.50 மணியளவில், நிலவும் மோசமான வானிலையின் காரணமாக, கலபட – வட்டவளை இடையே மரம் ஒன்று புகையிரத பாதையில் விழுந்துள்ளது.

அந்த மரத்தை தூரத்தில் கண்ட புகையிரத ஓட்டுநர், சாமர்த்தியமாக புகையிரத்தை நிறுத்தியதனால் பயணிகள் உயிர் பிழைத்தனர். பின்னர், ஓட்டுநரின் வழிகாட்டலின்படி பயணிகள் இணைந்து மரத்தை அகற்றி, புகையிரத பாதையை சீர்செய்தனர்.

இதேவேளை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்