நட்பு நாடான கட்டார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏவுகணைத் தாக்குதல் ஏற்படுத்தவில்லை என்று ஈரானிய உயர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
கட்டாரிலுள்ள அல் – உதெய்த் அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈரானிய உயர் பாதுகாப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.
